Monday, November 11, 2013

யாயும் ஞாயும்

"யாயும் யாயும் யாராகியரோஅனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழியரிடும் உறவு சேர்ந்த்தது என்ன
ஓரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த்த நீர்த் துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன"

இந்த வரிகள் உள்ள பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாக தான் இருக்க முடியும். 'நறுமுகையே நறுமுகையே' என்ற இந்த பாடலின் வரிகள் 'குறுந்தொகை' யிலுள்ள ஒரு பாட்டில் இருந்து தழுவி எழுதப்பட்டது. அந்த பாடல்:

"யாயும் ஞாயும் யாரா கியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி யறிதும் 
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"

இது குறிஞ்சி நில தலைவன் கூற்றாக வரும் பாடல்.
இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அதனாலேயே பாட்டில் வரும் 'செம்புலப் பெயனீரார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த பாட்டின் பொருள்,

"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா?
என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர்கள்?
நீயும் நானும் எவ்வழி அறிமுகமானவர்கள்?
(எனினும்) பாலை நிலத்தில் பெய்த மழை போல 
நம்மிருவரது அன்புடைய நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன."


இதை கவிஞர் மீரா (வாசகப் பர்வம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்) அருமையாக கிண்டலடித்து இன்றைய சமூஹத்தைப் பற்றி பாடுகிறார்.

"உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் - 
வாசுதேவ நல்லூர்...

நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்-
மைத்துனன்மார்கள்

எனவே செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.


இந்தப் பாட்டுக்கு மீரா இட்ட தலைப்பு நவயுகக் காதல். இதை சுஜாதா தன்னுடைய 'காதல் என்பது ...' கட்டுரையில் சொல்லி முடித்திருப்பார்.

No comments:

Post a Comment