Showing posts with label new attempts. Show all posts
Showing posts with label new attempts. Show all posts

Wednesday, April 11, 2012

கெட்ட வார்த்தை



“எனக்கொரு சந்தேகம்”
“கேளேன்???”, புன்னகையுடன் அவள்.
“பொண்ணுங்க எல்லாம் கெட்ட வார்த்தை பெசுவாங்களா???”
“ம்…”, யோசிப்பது போல் பாவனை செய்தாள். “சிலர்…” என்று இழுத்தாள்.
“உனக்கு தெரிஞ்சு???”
“ஆங்ங்??.. நல்ல கேள்வி.. இதுக்கு பதில் சொல்வேன் னு நீ நெனக்குறியா?”
சிரித்தேன். ‘சொல்ல முடியாது‘ என்பதை எனக்கு வலிக்காமல்எவ்வளவு அழகாய் சொல்லி விட்டாள் இவள். என் தோழி. தேன்மொழி.
மாநிறம். சற்றே உயரம, ஒற்றை ஜடை, ஒக்கேஷனலி மல்லிச்ச்சரம் ஏறும் கூந்தல், பெரிய கண்கள்… பெண்ணுக்கு இலக்கணம் இல்லை, என்றாலும் பெண் என்ற பிரிவினையுள் அடங்கும் வண்ணம் அழகாய்…
“சரி அதிருக்கட்டும்… ஒன்னு கேக்கணும்…”
“கேளேன்??”, புன்னகைத்தாள். அவள் ‘கேளேன்’ என்பதில் ஒரு அழகு உண்டு. அந்த ‘க’கரத்தை சற்றே அழுத்தி, ‘ஏ’காரத்தை இழுத்து, ‘ன்’-ஐ ‘ங்’ ஆக்கி, ‘க்கேஏளேங்’ என்பது போல் ஒலிக்கும்.
“உனக்கு கெட்ட வார்த்தைகள் ஏதாவது தெரியுமா?”
சிரித்தாள். புன்னகைத்தாள்… வெட்க்கப்பட்டாள்…
“நான் லாம் பேச மாட்டேன் பா”, என்றாள். அந்த ‘பா’ – முன்னிலை ஒருமையாய் ஒரு புதிய ஆண்-பெண் நட்பில் வரும் ‘பா’ அல்ல. யாரோ, மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் அமைந்த ‘பா’. என்னை குறி வைத்து ஒரு சண்டையின் போது மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் சொன்னாள்…
“நீ பேசுவியா னா கேட்டேன்??? உனக்கு தெரியுமா?”
“அதெல்லாம் சொல்ல முடியாது…”
“என்கிட்டே சொல்றதுக்கென்ன???” இது என் ஆயுதம். அவள் சரெண்டர் ஆகி விடுவாள் இப்படி கேட்டால்.
“அட போடா நீ வேற!”
“ஸ்கூல்-ல யே  தெரிஞ்சுருக்குமே??? உண்மையா சொல்லு”
“பேசுவாங்க… எனக்கும் தெரியும்.. தி வீ….”, தயங்கினாள்.
“தி???”
“தி வீடியோ மேன்… இத வேகமா சொன்னா, ஒன்னு வரும் ல? அது ஸ்கூல் ல பிரபலம்”, அவள் படித்தது பெண்கள் மேல் நிலை பள்ளி என்பது குறிப்பிட தக்கது.
“ஓஹோ! எது?? அந்த வார்த்தையா???”
“இல்ல… இப்படி சொன்னா, அப்படி வரும்… அது கெட்ட வார்த்த அப்டிங்கறது”
நான் சிரித்தேன். அவள், அவள் கன்னத்தில் விழுந்த சில முடிகளை எடுத்து காதிற்கு பின்னால் சொருகிக் கொண்டாள். தேநீர் கோப்பையை எடுத்து, ஒரு முறை தேநீரை ‘ஸ்ர்ர்ர்ர்’ என்று இழுத்தால். ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.
“என்ன யோசிக்கிற?”, அவள் யோசிக்க ஆரம்பித்தால் ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்று அர்த்தம. எந்த பெண் யோசித்தாலும் அப்படித்தான். அதனால், சிந்தனையை கலைத்தேன்.
“இல்ல… ஏன் அப்படி ஒரு தொழில்?”
“எப்படி?”
“தி வீடியோ…”, இழுத்தாள்.
“சுஜாதா-வோட ‘எப்படியும் வாழலாம்’ சிறுகதை படிச்சதில்ல???”
“”இல்லை… யேன்???”, அவள் ‘ஏன்’ என்று கேட்க மாட்டாள். ‘யேன்’ என்பாள்… கேட்கவே யேதோ போல் இருக்கும்.. சிலிர்ப்பாய்…
“உனக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரியுது. அவங்களுக்கு அது தான் தெரியுது. அப்படி ஒரு தொழில்”
“இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா?”
“ஜஸ்டிஃபிகேஷன் இல்ல. ஆனா, அப்படி பார்க்க போனா, சரி தானே?”
“என்னமோ… எனக்கு தெர்ல”
மீண்டும் தேநீர் இழுத்தால். அவள் கண்கள் எதையோ கேட்க தயங்குவது போல் இருந்தது.
“என்ன? கேளு…”, நான் சொன்னேன்.
அவளுக்கு தெரியும், நான் கண்டுபிடித்து விடுவேன் என்று.
“அதில்ல… ஏன் ஆண்கள் அங்க போகணும்??? அப்படி என்ன அவுங்களுக்கு அப்படி ஒரு அடக்கிக் கொள்ள முடியாத ஒரு …”
வெற்றிடம்…
கேட்டுவிட்டாள்…
நான் தேநீர் கோப்பையை எடுத்து ஒரு இழு இழுத்தேன். ‘சரி காமெடியாவே அப்ரோச் பண்ணுவோம்…’, மனதில் நினைத்து கொண்டேன்.
“மனைவி திருப்திபடுத்தலைனா போவாங்க… இப்போ, உன் கல்யாணத்துக்கப்றம்…”, சிரித்து கொண்டிருந்த கண்கள், முறைத்தான.
“ம்… சொல்லு”, அதிகாரமாய் சொன்னாள்.
“..உன் கணவனும் போகலாம்… நீ…”
“எங்கே???” கேள்வியுடன், என் பேச்சை நிறுத்தி, முறைப்பின் காரத்தை கூட்டினாள்.
“ப்ராஸ்டிட்யூட் கிட்ட”
ஆங்கிலம் எவ்வளவு அழகிய ஒரு ஆயுதம்! எவ்வளவு கேவலமாம் வார்த்தையையும் அழகாய் சொல்லும் படி இருக்கின்றது?!?
“ஓஹோ! அப்ப பெண்கள் லாம் என்ன செய்றதாம்???”
“தெரியல…”
“அவுங்களுக்கெல்லாம் எதிர்பார்ப்பு இருக்காதா???”
“அதிகமான எதிர்பார்போட இருக்கிறது பெண்கள் தான்…”
“ஆமா.. எதிர்பார்ப்பு அதிகமா தான் இருக்கும். இந்த வசதி எல்லாம் இல்ல பாருங்க!”
பாருங்க-வில் வந்த ‘ங்க’ மரியாதை அல்ல. கான்வர்ேஸஷனில், பலபோதும் ஆண்களிடம் பொதுவாக ஏதேனும் சொல்ல விழைந்தால், இப்படி தான் சொல்வாள்.
சிறு மௌனம் நிலவியது.
அவளே அம்மௌனத்தை கலைத்தாள்.
“ஆமா… ப்ராஸ்டிட்யூட் கிட்ட போறாங்களே, அவுங்கெல்லாம் அப்டினா மேல் ப்ராஸ்டிட்யூட்ஸ் தானே?”
என் தேநீர் கோப்பையை எடுத்து தேநீரை இழுத்தேன். காலி ஆகி இருந்தது. காற்றை இழுத்தேன்.
அவள் கேள்வியின் உறைப்பு இப்பொழுது தான் மூளையில் மெதுவாக இறங்கியது.
“ஆமா… இல்ல.. தெரியல… இருக்கலாம்…”, உளறினேன். உரக்க சிரித்தாள். அந்த கடையில் இருந்த இருவர், திரும்பி என்னையே பார்த்தார்கள்…
பில் பே பண்ணிட்டு வெளிய வந்தோம்.
“நான் வேற யார்ட்டயும் இப்படி பேசுறதில்ல”, நான்…
“ஆமா, நாங்க தெனமும் ஒரு நூறு பேர்ட பேசறோம்… போ ல..”

“என்னமோ… யார்க்கு தெரியும்…”, நான் முன்னால் ஓட, அவள் துரத்திக் கொண்டு வந்தாள்.

Sunday, January 8, 2012

இப்படியும் ஒரு கதை...



"வாப்பா"

"வேணாம்ணே...", ஒரு மாதிரி சிரித்து கொண்டே சொன்னான்.

நான் மேஜை மேல் நிர்வாணமாக அமர்ந்திருந்தேன். எனக்குள்ளே ஏதோ வெப்பமாக உணர்ந்தேன்.

"வேணாம் தலைவா...", இன்னொருவனும் மறுத்தான்.

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்தவன் தலைவன். இருவர் தொண்டரென்று நினைக்கிறேன். எங்கள் அருகே வருவதற்கு பயந்து நின்றார்கள். சட்டென தலைவர் என் பக்கம் வந்து, என் உடலை வளைத்து பிடித்து, உதட்டருகே கொண்டு சென்று, மெதுவாக முத்தமிட்டார். ஒரு சில முத்தங்களுக்கு பிறகு, வியர்வை சிந்த தலைவர் காசு கொடுத்துவிட்டு நகர்ந்தார். அன்று தான் எனக்கு முதல் முறை. தேதியும் கூட நினைவில் உள்ளது. நவம்பர் 4. அப்போது நல்ல குளிர் காலம். எனக்கும் நல்ல டிமாண்ட். ஒரு நாளைக்கு எட்டு பத்து முறையாவது... என்னுடன் அந்த கூட்டத்தில் ஒரு முப்பது பேராவது இருந்திருப்பார்கள்.


ஒருமுறை ஒருவர் என்னை தீண்டி ரசித்தால் குளியல் எனக்கு மிக முக்கியம். எங்களுக்கான நீச்சல் குளம் ஒன்று அமைத்து கொடுத்திருந்தார் எங்கள் முதலாளி. அதில் அடிக்கடி தண்ணீர் மாற்றம் செய்வார்கள். சில நேரம் வெதுவெதுவென சுடுத்தண்ணியம் கிடைக்கும். அன்றெல்லாம் குஷிதான்.


என்னை நாடி பலதரபட்ட மக்கள் வருவதால் எனக்கு நெறைய விஷயங்கள் தெரியவும் வந்தது. ஐ.டி. (I.T) கம்பெனி முதல் அரசியல் வரை. சிவில் கான்ட்ராக்டில் இருந்து விளையாட்டு வரை.


விளையாட்டு என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் நான் மறக்கவே மாட்டேன். அன்று நவம்பர் 26.மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய சுற்றுபயணம் மேற்கொண்டு இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள்... 'டிரா' வாக முடிய இருந்த ஆட்டத்தில் அஸ்வின் என்ற தமிழக பந்து வீச்சாளர் கலக்க இந்தியா பக்கம் வீசியது காற்று. அன்று ஒரு மூன்று மூன்றரை நேரம். மதியம். மதியம் ஒரு பையன் வந்தான். அவன் என்னை ரசித்தாநா என்றே என்றே சந்தேகம். எனக்குள் இருந்த வெப்பத்தை உணர்ந்தானா என்றே தெரியவில்லை. ஓரிரு முத்தங்களிட்டான். திடீரென்று அவன் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ். டோன் அடித்தது. "ச்ச... கோஹ்லி அவுட்... நாம தொதுடுவோம் போலயே!", என்று புலம்பி கொண்டே, என்னை விளக்கினான். ஓனரிடம் காசு கொடுத்துவிட்டு, "மேட்ச் பரபரப்பா போகுதுண்ணே. பொறவு வாரேன்" என்று கூறிவிட்டு சென்றான். அவனுக்கு ஒரு 21 வயதிருக்கும். எத்தனை வயதானாலும், அரைகுறையாய் முடிந்தாலும் குளித்ததாக வேண்டும். உள்ளிருந்த வெப்பத்தை அந்த நீராடல் தணிக்கும். ஃப்ரெஷ் ஆக்கிவிடும்.


அன்று இருவர் வந்தனர். என்னை ஒருவன் எடுத்துகொண்டான். ஒன்றுமே செய்யவில்லை. நாற்காலி மேல் என்னை நிர்வாணமாக அமர்த்தினான். சும்மா உட்கார்ந்திருக்கும் என்னை பார்க்க அவனுக்கு என்ன ஆசையோ! சில காகிதங்களில் கையெழுத்திட்டான். "உங்களுக்கு வேண்டுமா?" என்று இன்னொருவனிடம் கேட்டான். எனக்கு எரிச்சலாக இருந்தது. 'இவன் யாரடா இவன், என்னை வாங்கிக்கொண்டு அவனிடம் வேண்டுமா என்று கேட்கிறான்', என்று. நல்ல வேளையாக,"வேண்டாம். அடுத்த முறை பாத்துக்கலாம்", என்றான். "பேபெர்ஸ் லாம் கரெக்டா இருக்கா-னு ஒரு தடவ பாத்திடுங்க" என்றான் இவன். எனக்குன் இருந்த வெப்பம் தணிந்திருந்தது. என்னை எடுத்து அவன் ஒரு நீண்ட முத்தமிட்டான். அவன் உதடுகளை அவனே நாக்கால் தடவிக்கொண்டான். நான் குளியலுக்காக குளத்தில் தள்ளப்பட்டேன்.


இந்த குளியல் தான் எவ்வளவு சந்தோஷமான ஒரு வேலை? ஒரு சில நேரல்மேல்லாம் அடுத்த கஸ்டமர் எனக்காக வரும் வரை குளித்து கொன=தே இருப்பேன். சில நேரம் உலர்திக்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயங்களில், ஒரே ஒரு உதறல் தான். எல்லாம் சரியாகிவிடும். இரவில் எனக்கு கஸ்டமரே கிடையாது. எங்கள் பிசினெஸ் ஆரம்பமாகி, ஒரு நான்கு மாதங்கள் ஆகின்றன. இனி கோடை காலம். கஸ்டமர்கள் குறையும் காலம். வெயிலினால் நிறைய பேர் வர மாட்டார்கள். ஆனால், வெயிலின் உக்கிரத்தை குறைக்க குளியல் வேண்டும்.


இப்படியே போய் கொண்டிருந்த என் வாழ்வில், நேற்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஆட்டோக்காரன் வந்தான். என் உடலை வளைத்து பிடித்து கொண்டான். என்னை அவன் உதடருகே கொண்டு சென்றான். முத்தமிட்டான். எனக்குள்ளிருந்த வெப்பம் அவன் மேலுதடை சுட்டது. சட்டென்று என்னை விடுவித்தான்.  நான் கீழே விழுந்தேன். என் மேல் பாகம் உடைந்து போனது. உள்ளிருந்த இஞ்சி-டீ சிந்தியது. என்னை கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரல் கும் இடையில் பிடித்து, ஓனர் ஒரு ஓரமாக வைத்தார். கீழே சிதறி கிடந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து ஓரமாய் எறிந்தார். ஆட்டோக்காரன் "ஸாரி" என்று கூறிகொண்டே தலையை சொறிந்தான். ஓனர் அவனையே பார்த்துகொண்டிருந்தார். இனி குளியல் இல்லை!!!